தன்வியின் பிறந்தநாள் -புத்தக விமர்சனம்
தன்வியின் பிறந்தநாள் இந்த புத்தகம் சிறுவர்களின் எண்ணங்களை அழகாக பிரதிபலிக்கிறது. தன்வியின் பிறந்தநாள்:- தன்வி கனவு இப்பொழுது இருக்கும் சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமானது. இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.என்று தெளிவாக நமக்கு உணர்த்தும் கதை. இயற்கை பேசுவது மிகவும் அருமை, இறுதியாக தன்விக்கு ரோஜா கொடுக்கும் முத்தம் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைவர் ஜெய் செய்தது சரியா? இந்த கதையில் ஜெய்யின் வெகுளித்தனம், மற்றவர்களுக்கு உதவும் குணம் மிகவும் சிறப்பு, சிறுவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களில் ஒன்று உதவி செய்வது. உதவி செய்யும் குணம் சிறுவர்களுக்கு வேண்டும் என்று உணர்த்திய கதை மிக அருமையாக இருந்தது. ஜெய்யின் அம்மா அவன் கூறுவதை காது கொடுத்து கேட்டு அவனை பாராட்டி இருக்கலாம். அவனது உதவி செய்யும் குணம் மேலும் வளர்ந்திருக்கும். குட்டி நாய்க்கு பெயர் கிடைத்தது எப்படி? என்ற கதையில் அம்மாவின் அருமையையும் ,உயிரினங்களின் மேல் அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அனைத்து உயிரினங்களும் உணர்வுகள் உண்டு என்பதை நமக்கு உணர்த்திய கதை. தன்மையின் பூந்தோட்டம் குழந்தைகள் செடி ...