பரிசோதனை செய்து பார்ப்போமா?-விமர்சனம்

படித்த புத்தகத்தின் பெயர் பரிசோதனை செய்து பார்ப்போமா? இந்த புத்தகத்தை நான் மெய்மறந்து படித்தேன், இந்த புத்தகத்தை படிக்கும் போது நான் ஒரு எளிமையான அறிவியல் புத்தகத்தை படிப்பது போலவே உணர்ந்தேன்

நான் முதன்முதலில் மிகுந்த ஆர்வத்துடன் படித்த புத்தகம் இதுதான், இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்று தோன்றியது, இந்த புத்தகத்தை படித்துவிட்டு, இந்த புத்தகத்தைப் பற்றி பெருமையாக பலரிடமும் புலம்பினேன்

எனக்கு அந்த சோதனைகள் அனைத்தும் பிடித்திருந்தது, குறிப்பாக எனக்கு நிழல் சோதனை ரொம்ப பிடித்திருந்தது,

இந்த புத்தகத்தை படிக்கும்போது, சிறு வகுப்பு படிக்கும் மாணவர்கள் வானவில் மன்றம் நினைவுக்கு வந்தது, இந்த புத்தகம் அறிவியல் சோதனைகளை நன்கு விளக்குகிறது. இந்த புத்தகம் அறிவியல் சோதனைகளை எளிதாகிறது

எனக்கு இந்த புத்தகம் மிகவும் பிடித்திருக்கிறது, மேலும் சிறுபிள்ளையில் வீட்டில் மின்சாரம் நின்று விட்டால், நான் என் நண்பர்கள் அனைவரும் நிழல் நாடகத்தை நடத்துவோம், இந்த புத்தகத்தை படிக்கும்போது அது போன்ற பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது..

இந்த புத்தகத்தை படித்த பிறகு பல அறிவியல் பூர்வமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

விமர்சித்தவர் பெயர்:- மு.ஜோஷிகா
வகுப்பு:- 10
பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரை கோட்டைக்காடு.

புத்தகத்தின் பெயர் :- பரிசோதனை செய்து பார்ப்போமா ஆசிரியர் பெயர்:- ரோஸ் வைலர், (தமிழில் ஆதி வள்ளியப்பன்)

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்