ஏழு தலைமுறைகள் - நூல் விமர்சனம்
இப்புத்தகம் ஒரு உண்மையான கதையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது, அத்தோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான மற்றும் ஆர்வமூட்டும் புத்தகம், அமெரிக்காவில் உள்ள கருப்பர்களின் நிலையையும் அவர்களின் முன்னேற்றத்தையும், ஆங்கிலேயர்களின் மனிதத் தன்மையற்ற செயல்கள் மற்றும் வரட்டு கௌரத்தையும் எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது வரலாற்றை ஏன்? தெரிந்து கொள்ள வேண்டுமென்ற கேள்விக்கு இந்த புத்தகமே பதிலாகும் இதனைப் படித்த பிறகு என் இனம் எது? நான் யார்? என் வரலாற்று என்னவென்று என்னைத் தேட வைத்துள்ளது இப் புத்தகம். முதலில் எல்லாக் கதைகள் போல் இருந்தாலும் பக்கங்கள் நகர நகர விறுவிறுப்பையும்.. இறுதியில் எதிர்பாராதத் திருப்பத்தைக் கொண்டுள்ளது... ஆப்பிரிக்கா நாட்டின் கருப்பர்களின் வாழ்க்கை முறை பற்றி தெரிந்துக் கொண்டது வியப்பாகவும், ஆர்வமாகவும் இருந்தது. அவர்களின் குழந்தைக்கு பெயர் வைப்பது, ஆண்களுக்கான தேர்வு...... என எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் உங்களுக்கு என்ன வேலை! படியுங்கள்! நாம் அனைவரும் படித்து அறிந்து புரிந்து தெரிந்து நடந்துக் கொள்ள வேண்டிய புத்தகம். இதனைப் படிப்பதன் மூலம் நம் எவ்வள...