ஏழு தலைமுறைகள் - நூல் விமர்சனம்



இப்புத்தகம் ஒரு உண்மையான கதையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது, அத்தோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான மற்றும் ஆர்வமூட்டும் புத்தகம்,

அமெரிக்காவில் உள்ள கருப்பர்களின் நிலையையும் அவர்களின் முன்னேற்றத்தையும், ஆங்கிலேயர்களின் மனிதத் தன்மையற்ற செயல்கள் மற்றும் வரட்டு கௌரத்தையும் எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது வரலாற்றை ஏன்? தெரிந்து கொள்ள வேண்டுமென்ற கேள்விக்கு இந்த புத்தகமே பதிலாகும்

இதனைப் படித்த பிறகு என் இனம் எது? நான் யார்? என் வரலாற்று என்னவென்று என்னைத் தேட வைத்துள்ளது இப் புத்தகம்.

முதலில் எல்லாக் கதைகள் போல் இருந்தாலும் பக்கங்கள் நகர நகர விறுவிறுப்பையும்.. இறுதியில் எதிர்பாராதத் திருப்பத்தைக் கொண்டுள்ளது...

ஆப்பிரிக்கா நாட்டின் கருப்பர்களின் வாழ்க்கை முறை பற்றி தெரிந்துக் கொண்டது வியப்பாகவும், ஆர்வமாகவும் இருந்தது. அவர்களின் குழந்தைக்கு பெயர் வைப்பது, ஆண்களுக்கான தேர்வு...... என எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் உங்களுக்கு என்ன வேலை! படியுங்கள்! நாம் அனைவரும் படித்து அறிந்து புரிந்து தெரிந்து நடந்துக் கொள்ள வேண்டிய புத்தகம்.

இதனைப் படிப்பதன் மூலம் நம் எவ்வளவு மேம்பட்டிருக்கிறோம்."நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்"நம் முன்னோர்கள் நமக்காக என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம், இனி நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்..

புத்தக விமர்சனம் செய்தவர்:- ஆ.அகிலா
வகுப்பு:- 12ஆம் வகுப்பு (2023-2024)
பள்ளி:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
வெங்கரைக்கோட்டைக்காடு

புத்தகத்தின் பெயர் :- ஏழு தலைமுறைகள்
ஆசிரியர் பெயர் :- அலெக்ஸ் ஹேலி

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்