Posts

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை - நூல் அறிமுகம்

Image
கர்நாடக சங்கீத உலகில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக விளங்கும் டி எம் கிருஷ்ணா அவர்கள்... தன்னைச் சார்ந்த சமூகத்தில் உள்ளவர்களால், கர்நாடக சங்கீத உலகில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கிறார்.. அந்த வரிசையில் அவர் எழுதிய Sebastian and sons என்ற நூலின் தமிழாக்கமே மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை என்ற நூல்.. மிருதங்கம் செய்பவர்களுக்கும், அதனை வாசிப்பவர்களுக்கும் இடையில் உள்ள உறவுகளையும், அதில் உள்ள நுட்பமான சாதிய அரசியலையும் விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தும் ஓர் ஆவண நூலாகவே இந்த நூல் திகழ்கிறது.. இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் மற்ற இசைக்கருவிகளை பயன்படுத்துவது போல் மிருதங்கத்தை அவ்வளவு எளிதாக பயன்படுத்த இயலாது.. அதற்கு அதை செய்பவர்கள் எப்போதும் அருகில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.. மிருதங்கம் எப்பொழுது வேண்டுமானாலும் பழுதுபடலாம்.. மிருதங்கத்தின் சுருதி எப்பொழுது வேண்டுமானாலும் குறையலாம்.. அதை சரி செய்வதென்பது வாசிப்பவர்களால் பெரும்பாலும் இயலாத காரியமாக உள்ளது எனவே மிருதங்கம் செய்யும் கலைஞர் ஒருவர் எப்பொழுதும் மிருதங்கம் வா...

கிறுக்கல்கள் -அறிமுகம்

Image
புதுமையைக் கூட புதுமையாக செய்ய முயலும் புதுமையான மனிதன் பார்த்திபன் அவர்கள் எழுதிய கிறுக்கல்கள் புத்தகத்தில் மட்டும் புதுமைக்கு பஞ்சமா இருக்கப் போகிறது... புத்தகத்தை திறந்த உடனே தன் முதல் கிறுக்கள்கள் என தன் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு இருப்பதும்.. மனைவிக்கு "என்னை நேசித்த முதல் கவிதை" என எழுதி மனைவியின் புகைப்படத்தில் தலையில் ஐஸ் கட்டியை வைத்திருப்பதும்.. முதல் கவிதை என்ற வார்த்தையை ஆய்வுக்கு உட்படுத்தி முதல் என்ற வார்த்தை பொருத்தமா? உண்மையா? என விளக்கி இருப்பதும்.. இரண்டு பக்கங்களில் ஒன்றுமே எழுதாமல் ஒரே ஒரு கரும்புள்ளியை மட்டும் வைத்து நிரப்பி இது கவிதையா என நம்மை அடுத்த பக்கத்தை திருப்பாமல் யோசிக்க வைப்பதும்... அடுத்த பக்கத்தில் "வெறும் புள்ளி மட்டும் தான் நான் வியாபித்திருக்கும் வெற்றிடமாக இதயம் முழுவதும் நீ" என எழுதி முதல் இரண்டு பக்கத்திற்கு வலு சேர்த்து இருப்பதும்.. கவிதை புத்தகம் என நினைத்து புரட்டிக் கொண்டே வரும்போது நடுவில் தன் முதல் படம் பற்றிய கட்டுரை எழுதி இருப்பதும்.. திடீரென ஆங்கிலத்தில் ஐந்து வரியில் ஐந்து சொற்களை ...

தியாக பூமி - நூல் அறிமுகம்

Image
அம்மா இல்லாத பெண் சாவித்திரி, அப்பாவின் அன்பு மழையிலும், சித்தியின் கோரப்பிடியிலும், வளரும் இவளுக்கு மிக பால்ய வயதிலேயே திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.. திருமணம் தன்னை இந்த வீட்டிலிருந்து விடுவிக்கும் என்று நம்பும் இப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மிக சுவாரசியமாக நாவலாக கொடுத்துள்ளார் கல்கி அவர்கள்.. திருமண விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் கணவன்.. பணத்துக்காக மட்டுமே மருமகளாக இவளை தேர்வு செய்யும் மாமியார்.. வீட்டில் நடக்கும் எந்த ஒரு காரியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத மாமனார்.. இப்படிப்பட்ட வீட்டால் பாதிக்கப்பட்டு பிரசவ நேரத்தில் தனியாக பிறந்த வீட்டை நோக்கி வரும் சாவித்திரிக்கு.. பூட்டி கிடக்கும் வீடு வரவேற்றால் எப்படி இருக்கும்.? ஏன் வீடு பூட்டி கிடக்கிறது?? அப்பா எங்கே? என்ன ஆனார்?? எங்கே போனார்?? என அவள் வயிற்றில் குழந்தையோடு தேடி அலையும் காட்சிகள்.. எங்கோ அனாதையாய் ஓரிடத்தில் பிள்ளை பெற்று.. இனி குழந்தையை எவ்வாறு வளர்ப்பேன் என வேலைக்காக தேடி அலையும் காட்சிகள்.. இறுதியில் இறப்பு மட்டுமே ஒரே வழி என முடிவெடுத்து மார்பளவு நீரில் இறங்கிய பிறகு வரும் தி...

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

Image
சுற்றுப்புற சூழலுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.? * மரம் வளர்த்துள்ளேன்.. * பேரணிகள் சென்றுள்ளேன்.. * நெகிழிப்பை உபயோகத்தை குறைத்துள்ளேன்.. * இயன்ற அளவு நீர் மேலாண்மை செய்துள்ளேன்.. * எரிபொருட்களை, மின் சாதனங்களை, காகிதங்களை குறைவாக பயன்படுத்துகின்றேன்.. எனக் கூறுவீர்கள் அல்லவா நீங்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் சுற்றுச்சூழலுக்கு கடுகளவு கூட உதவி புரிவதாய் இல்லை என்று சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா?? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? வினாவை எழுப்பி.. விடையையும் கூறுகிறது இப்புத்தகம்.. ஆம் ஒரு நூறு மரக்கன்றுகளையும், வருடம் தோறும் ஆயிரம் விதை பந்துகளையும், கையில் மஞ்சள் பையுடனும் சுற்றுச்சூழல் மைந்தன் என திரிந்த என் மண்டையில் ஒரு கொட்டு கொட்டியது இப் புத்தகம்... யானை பசிக்கு எறும்பு தீனி என்பது போல நம் செயல்கள் உள்ளன என உரக்க கூறி.. அழிப்பவனாலும், ஆள்பவனாலும் மட்டுமே இச்சுற்றுச்சூழலை காக்க முடியும் நம்மால் காப்பது போல் நடிக்க மட்டுமே முடியும் என உணர்த்தி உள்ளது இப்புத்தகம்.. கனவு நாயகனென நம் அனைவராலும் ம...

தாயம் - நூல் அறிமுகம்

Image
மஹத்ரயா ரா என்ற புனைப்பெயர் கொண்ட T T.ரங்கராஜன் அவர்களால் எழுதப்பட்ட Unposted letter என்ற நூலின் தமிழாக்கமே தாயம் என்ற இந்த புத்தகம்.. மொழிபெயர்த்தவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.. படிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வு ஒரு இடத்தில் கூட வரவில்லை என்பது கூடுதல் சிறப்பு... இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகள் கொண்ட ஒரு நூல், இந்நூலின் சிறப்பே, கட்டுரையினுடைய நீளம் தான்.. இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்குள்ளாகவே அனைத்து கட்டுரைகளும் முடிவுறுகின்றன.. மிகக் குறைந்த அதேசமயம் சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நறுக்கென வார்த்தெடுத்த கட்டுரைகள்... சிலருக்கு புத்தகம் படிக்கும் போது முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிடும் பழக்கம் இருக்கும், நீங்கள் அப்படிப்பட்ட வாசகர்களாக இருந்தால், இப் புத்தகம் முழுமையும் நீங்கள் அடிக்கோடு இட வேண்டி இருக்கும், அவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்து முன் பின் நிறுத்தி மனதோடு பொருத்தி எழுதப்பட்ட கட்டுரைகள்.. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பு கூட நம்மிடம் ஏதோ ஒரு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.. புத்தக து...

யானை டாக்டர் - நூல் அறிமுகம்

Image
ஒரு உன்னத படைப்பை வாசித்து முடித்த முழு திருப்தியும் கிடைத்த அனுபவத்துடன் எழுதுகின்றேன் இவ் விமர்சனத்தை... ஒரு யானையின் பிணக் கூராய்வுடன் அறிமுகமாகிறார் டாக்டர் கே எனப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி... ஒரு யானையை, அதுவும், காட்டில் பல நாட்களுக்கு முன் இறந்து கிடக்கும் யானையின் உடலை பிணக்கூறாய்வு செய்வதற்கு, ஒரு மனிதனுக்கு எவ்வளவு மனோபலம் வேண்டும் அல்லது இயற்கையின் மீது எவ்வளவு காதல் வேண்டும் அல்லது தன் பணியின் மீது எவ்வளவு நேசம் வேண்டும் என்பதை புரிய வைக்க எழுத்தாளர் கை கொண்டு உள்ள யுக்தி மிகவும் சிறந்தது... பிணக்கூறாய்வு செய்பவருடைய மனநிலை பற்றி எதுவும் கூறாமல் அதை பார்த்தவரின் மனநிலை பற்றி மிக விரிவாக விவரித்து, யானை டாக்டர் மீது, யானையை விட பன்மடங்கு பெரிய மரியாதையை விதைத்து விடுகின்றார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்... வன காவலர், யானை டாக்டரிடம் முதன் முதலில் உரையாடும்போது, யானை டாக்டர் சொல்வதாக, எழுத்தாளர் எழுதியுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது... ஆழ்ந்து படித்தால், உண்ண மட்டுமே தெரிந்த புழுக்கள் கூட உங்களுடைய வளர்ப்பு பிராணியாக மாறலாம் ஆச்சரிய...

ரஃப் நோட் - நூல் அறிமுகம்

Image
திரு ஆயிஷா நடராசன் அவர்கள் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லியாக இப்புத்தகத்தில் திகழ்கிறார்.. பல கதைகளை தொகுத்து ஒரே கதையினுள் முடிச்சிட்டு, ஒரு துளி அளவு கூட சுவாரசியம் குறையாமல், அதே சமயம் பல கதைகளை படிக்க வைக்கும் நிகழ்வை நிகழ்த்தி காட்டியுள்ளார் ஆயிஷா நடராசன் அவர்கள் இவருடைய கதைடாஸ்கோப் என்ற புத்தகத்திலும் இதே போன்றதொரு கதை சொல்லும் முறையை பயன்படுத்தி இருப்பார் ஆயினும் அந்தப் புத்தகத்தில் கதைகளை ஒரே கதைக்குள் கோர்க்க வேண்டும் என்கின்ற மெனக்கெடல் வெளிப்படையாக தெரியும்.. ஆனால் இந்த புத்தகம் கதையினுள் பல கதைகள் மிக கச்சிதமாக பொருந்தி கதைடாஸ்கோப் புத்தகத்தை விட மிகச் சிறப்பான புத்தகமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது... முதல் ஐந்தாறு பக்கங்கள் ஏதோ சம்பந்தம் சம்பந்தமில்லாமல் வரிகள் இருப்பதாக தோன்றலாம் பிறகுதான் புரிகிறது சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் ஒருவகையான பிரச்சனையில் உள்ள குழந்தையைப் இப்புத்தகத்தின் நாயகனாக தேர்ந்தெடுத்துள்ளார் என்பது.. தனக்குத் தானே பேசிக் கொள்ளும், அடிக்கடி பொருட்களை மறந்து விடும், கற்றல் குறைபாடுடைய ஒரு குழந்தையை நம் கண் ம...

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்